இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிருவாகிகள் தெரிவுக்கான பொதுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (19.02) இலங்கை தமிழரசு கட்சியின் கட்சிக்காரியாலயத்தில் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து ஆர்வத்துடன் கலந்து கொண்ட அதிகளவான இளைஞர்கள் மத்தியில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிருவாகிகள் தெரிவு இடம்பெற்றது.
அந்தவகையில்
தலைவர்
லோ.தீபாகரன்
லோ.தீபாகரன்
செயலாளர்
க.சசீந்திரன்
க.சசீந்திரன்
பொருளாளர்
ம.நிலக்சன்
ம.நிலக்சன்
உபதலைவர்
து.மதன்
து.மதன்
உபசெயலாளர்
பாலசிங்கம் முரளிதரன்
பாலசிங்கம் முரளிதரன்
கல்வி
தே.மயூரன்
தே.மயூரன்
விளையாட்டு துறை
த.கிருஷ்ணகாந்
த.கிருஷ்ணகாந்
சுகாதாரம்
தேவசிங்கம் திலக்சன்
தேவசிங்கம் திலக்சன்
கலைகலாரம்
த.இன்பராசா
த.இன்பராசா
நலன்புரி
த.விமலராஷ்
த.விமலராஷ்
சமூகசெயற்பாடு
இரா.சாணக்கியன்
இரா.சாணக்கியன்
முன்னால் போராளிகள் தொடர்பான விடயம்
எஸ்.ஜனார்த்தனன்
எஸ்.ஜனார்த்தனன்
மாற்றுத்திறனாளிகள் விடயதனம்
கே. சோபனன்
கே. சோபனன்
பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்கள் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கை.
அ.கிருராஜன்
அ.கிருராஜன்
அனர்த்த முகாமைத்துவம்
ந.துஷ்யனதன்
ந.துஷ்யனதன்
அரசியல் விழிப்புணர்வு.
கி.சேயோன்
கி.சேயோன்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம், கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராசா, பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.