மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துவருவது கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலான தற்கொலைகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.

இந்த வருட ஆரம்பத்திலேயே எட்டுக்கும் மேற்பட்ட தற்கொலை மரணங்கள் கடந்த 23 நாட்களில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் அதிர்ச்சிவெளியிடப்பட்டுள்ளது.

இன்றும் மட்டக்களப்பு,கல்லடி,நாவற்குடா இசைநடனக்கல்லூரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

18 வயதுடைய சுப்ரமணியம் கிருத்திகா எனும் இளம் யுவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்க பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக அதிகரித்துவரும் இவ்வாறான சம்பவங்களை தடுப்பது குறித்து முறையான திட்டங்கள் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.