பியூட்ச மைன்ட் கின்டர் கார்டன் முன்பள்ளியின் வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

மட்டக்களப்பு பியூட்ச மைன்ட் கின்டர் கார்டன் முன்பள்ளியின் வருடாந்த கலை நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் முகாமையாளர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் திருமதி கே.கலாராணி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் முன்பள்ளி பிரிவுக்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவிராஜா,மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்பள்ளி பிரிவு பொறுப்பாளர் முரளிதரன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி பொறுப்பு உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அவை அங்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்வனவாக இருந்தன.

குறிப்பாக உணவினை வீண்விரயம் செய்யாதீர்கள் என்னும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட சின்னஞ்சிறு பாலகர்களின் நாடகம் அனைவரது பாராட்டினையும் பெற்றது.

ஐந்தாவது ஆண்டாகவும் நடைபெறும் இந்த நிகழ்வின்போது எதிர்வரும் தை மாதம் ஆண்டு ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன் தற்போதுள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பெற்றோர்,மாணவர்கள் என பெருமளவானேர்ர் கலந்துகொண்டனர்.