களுவாஞ்சிகுடி சாய் பாலர் பாடசாலை கலைவிழாவும் பரிசளிப்பும்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி சாகி பாலர் பாடசாலையின்  கலைவிழாவும் பரிசளிப்பும் .இன்று (02.12.2018) சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.



பிரதம அதிதியாக  ச.சசிகரன் செயலாற்றுப் பணிப்பாளர்இமுன்பள்ளி பணியகம், மட்டக்களப்பு சிறப்பு அதிதியாக  சா. பரணிதரன் வெளிக்கள உத்தியோகத்தர் படடிருப்பு கல்வி வலயம்முன்பள்ளி பணியகம்இ மட்டக்களப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் விழாவின் முதல் நிகழ்வாக அதிதிகளை மலர் மாலை அணிவித்து பாண்டு வத்தியத்துடன்  வரவேற்பு இடம் பெற்றது.அதனை தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும் இறைவணக்கமும் இடம் பெற்றது.
பாலர் பாடசாலை       பெற்றோர் ஆசிரியர்சங்க தவைவரின் தலைமையுரையை தொடர்ந்து மழலைகளின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது அந்த வகையில் பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. 2019 ஆம் ஆண்டு தரம் 1 செல்லும் மாணவர்களுக்கு இதன் போது பட்டமளிப்பு செய்யப்படமையும் குறிப்பிடதக்கவிடயம்.