விருது வென்ற வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயம்

 (படுவான்)

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான சிறந்த வருடாந்த அறிக்கைகள் போட்டியில்வெற்றி வாகை சூடிய பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழா 27.11.2018 செவ்வாய்க்கிழமை பி.ப.1.00 மணிக்கு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மிகவும் கோலகலமாக நடைபெற்றது.
இலங்கை கணக்கீட்டுத் தொழில் நுட்பவியலாளர் கழகம் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து நடாத்திய இவ்விழாவில் மட்.பட்.வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது இடம்பெற்று தேசிய மட்டத்தில் பங்கெடுத்தமைக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
இதன் போது வழங்கப்பட்ட சான்றிதழும் வெற்றிக்கேயமும் அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி தலைமையிலான குழுவினருக்கு பெரும் ஊக்குவிப்பாய் அமைந்தது.கல்வியமைச்சர் கலாநிதி.விஜயதாச ராஜபக்ஷ அவர்களும் மற்றும் பிற அதிதிகளும் இவ்விருதினை வழங்கி வைத்தமை பெரு வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது.
மேற்படி விருது கடந்த முறையும் இவ் வித்தியாலயத்துக்கு கிடைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விருதுகளையும் சான்றிதழ்களையும்  பாராட்டுக்களையும் இவ் வித்தியாலயம் இவ் வருடத்தில் பெற்றுக் கொண்டு வீறுநடை போடுகின்றமை இப் பகுதி சமூகத்தினரிடையே இவ் வித்தியாலயம் தொடர்பான பேரபிமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.