கொக்கட்டிச் சோலை ஸ்ரீ தான் தோன்றிஸ்வரர் பேராலயத்தில் இம் முறை சாதாரணதர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி விசேட பூசை வழிபாடு.
இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை ஆசி வேண்டி கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான் தோன்றி ஸ்வரர் பேராலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நேற்று சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
அமரசிங்கம் தயாசீலன் மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அவர்களினதும், மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்த விசேட பூசை வழிபாட்டு நிகழ்வில் சுமார் 800கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
க.பொ.த.சா தர பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இறை அருளாசி வேண்டி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற பூசை வழிபாடுகளின் போது ஸ்ரீ தான்தோன்றி ஸ்வரனின் பாதங்களில் வைத்து பூசிக்கப்பட்ட போனாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
சிவ ஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் மற்றும்
சிவ ஸ்ரீ சோதிலிங்க குருக்கள் பூசை நிகழ்வுகளை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.