தேற்றாத்தீவில் முன்னாள் போராளி தற்கொலை –உதவுமாறு கோரிக்கை

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான வைரமுத்து திசவீரசிங்கம் ஐந்து பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்னாள் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதை தொடர்ந்து வைத்தியர்களால் கைவிட்டநிலமையில் தனது விட்டில் இன்று(05.12.2018) இறந்துள்ளர்.

இந்த முன்னாள் போராளியின் உடம்பில் உள்ள யுத்தின் போது இடம் பெற்ற துகள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்திர் தெரிவித்தனர்.

இதன்காரணமாக பெரும் அவஸ்தைப்பட்டுவந்த இவர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் வறுமையில் உள்ள இவ் குடும்பத்தினர் அன்னாரின் இறுதி கிரிகையை செய்வதற்கும் வசதியில்லாமல் தவிக்கின்றனர்.
மனைவியின் தொடர்பு இலக்கம் 0755213209