போரதீவுப்பற்றுபிரதேசசெயலகம் சமூகசேவைபிரிவுகதிரவன் மாற்றுத் திறனாளிகள்அமைப்பும்; ஏற்பாடுசெய்யப்பட்டமாற்றுத் திறனாளிகள் தினவிழா


 (படுவான்)

மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்துதல் பாதுகாத்தல் எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினநிகழ்வு போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் (04) செவ்வாய்க்கிழமை பிரதேசசெயலாளர் ஆர்.ராகுலநாயகி ஏற்பாட்டில் நடைபெற்றது.

சர்வதேச மாற்றுத்திறனாளிகளின்  தினத்தினை மிகவும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கி மக்கள் வங்கிபிறண்டினா நிறுவனம் சொர்ணம் நகைமாளிகை மற்றும் நன்கொடையாளர்கள் எனஅனுசரனைவழங்கியிரந்தனர் 

இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்சா.அருள்மொழி சிறப்பதிதிகளாக கிழக்குமாகாண நவஜீவன நிறுவனத்தின் இணைப்பாளர் எஸ்.டேவிட் போரதீவுப்பற்று கோட்டக் கல்விஅதிகாரி த.அருள்ராஜாதிருமதி. சி.கோணேஸ்வரன் முன்னால் கிழக்குமாகாண சபை உறுப்பினர் மா.நடராசா ம.தெ.எ.ப பிரதேச சபையின் உறுப்பினர் எம்.வினோராஜா மற்றும் உளவள நிலையதிட்ட இணைப்பாளர் எஸ்.சில்வஸ்டார் கதிரவன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு தலைவர் பி.கோணேஸ்வரன் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஆகியோர்கள்  கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது மாற்றுத்திறனாளிகளினால் அதிதிகளை பொன்னாடை அணிவித்து கௌரவித்ததுடன் நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிதிகள் மூலமாக நினைவுப் பரிசில்களும் உதவிகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.