தேசிய ரீதியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் இருந்து தேசிய போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்கள் அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் முதல் இடத்தினைப்பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் க.முருகதாஸ் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக மாலைகள் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக பாடசாலை வரையில் மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.அருள்பிரகாசம் கலந்துகொண்டதுடன் பெற்றேர்ர்,பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பெருமளவானேர்ர் கலந்துகnhண்டனர்.