நாவக்குடா கிழக்கு இரண்டாம் குறுக்கு வீதி புனரமைப்பதற்கான வேலைத்திட்டம்

(லியோன்) 

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் 20 இலட்சம் ரூபா  நிதி ஒதுக்கீட்டின் மூலம் மண்முனை  வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு நாவக்குடா கிழக்கு இரண்டாம் குறுக்கு  வீதியினை கொங்கிரீட் இடப்பட்டு  வீதி புனரமைப்பதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசனின் விசேட பணிப்புரையின் கீழ் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக  20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த வீதியினை புனரமைப்பு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

வீதிக்கான கொங்கிரீட்  போடப்படுவதற்கான ஆரம்ப  நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் டி .பிரேம் ,மாநகர சபை உறுப்பினர்களான  டி .மதன் , பூபாலராஜா , நிஸ்கந்த ராஜா , ஸ்ரீரிஸ் காந்தராஜா   பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பி .குமுதமலர் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் பி ..பிரசாந்தன்  மற்றும் கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , ஸ்ரீ முருகன் ஆலய நிர்வாக பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்