மட்/பட் வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட சர்வதேச ஆடவர் தினம்

 (படுவான்)

நவம்பர் 19 சர்வதெச ஆடவர் தினத்தை ஒட்டிய விழா மட்.பட்.வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் காலை ஒன்றுகூடலின்போது மிககோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வித்தியாலய மகளிர் ஆசிரியர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த இவ்விழாவில் போரதீவுப்பற்று கோட்டைக்கல்வி அதிகாரி திரு.த.அருள்ராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.
ஆடவ ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பப் பரிசில்கள்  வழங்கிவைக்கப்பட்டதோடு அனைத்து மாணவர்களுக்கும் எழுது கருவிகளும் ஊக்குவித்தல் பண்டங்களும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.