இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக நினைவு தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று பகல் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முயற்சியில் முன்னெடுக்கப்பட உள்ள மேற்படி நினைவு தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் குறித்த நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வரும் பதில் முதல்வருமான க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வரலாற்றில் ஊடகவியலாளர்களின் பணி மகத்தானது அதுவும் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் உண்மைகளை வெளிக் கொண்டு வந்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட மிக மோசமான பதிவுகள் அதிகமாக உள்ளது.
வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் உண்மைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த அந்த உத்தம ஊடகவியலாளர்களை வரலாற்றில் என்றும் மறக்க கூடாது என்பதற்காகவும் இந்த நினைவு தூபி அமைக்கும் பணியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொண்டுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முயற்சியில் முன்னெடுக்கப்பட உள்ள மேற்படி நினைவு தூபி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் குறித்த நினைவுத்தூபி அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வரும் பதில் முதல்வருமான க.சத்தியசீலன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் கே.சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வரலாற்றில் ஊடகவியலாளர்களின் பணி மகத்தானது அதுவும் இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் உண்மைகளை வெளிக் கொண்டு வந்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட மிக மோசமான பதிவுகள் அதிகமாக உள்ளது.
வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் உண்மைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்த அந்த உத்தம ஊடகவியலாளர்களை வரலாற்றில் என்றும் மறக்க கூடாது என்பதற்காகவும் இந்த நினைவு தூபி அமைக்கும் பணியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மேற்கொண்டுவருகின்றது.