இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்


(லியோன்)

இந்திய வீட்டுத்திட்டங்களை  அமுல் படுத்துகின்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது ,


பிரதமர் அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு  மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வீட்டு தேவைகளின் நலன் கருதி இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வீட்டுத்திட்டங்களை அமுல் படுத்துகின்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடான கலந்துரையாடலும் களவிஜயமும் இன்று   முன்னெடுக்கப்பட்டன   

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்க்குடியமர்த்தப்பட்டுள்ள   மக்களுக்கான வீட்டு தேவைகள், ,மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசிய   வீடுகள் , சுகாதார வசதிகள் , மலசலகூட வசதிகள்  போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன

இந்த நிலையில் ஐந்து நிறுவனங்களின்  ஊடாக இருபதாயிரம் (20 ஆயிரம்) வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது

இதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான ,வேலைவாய்ப்பு , விவசாயம் ,கால்நடை போன்ற வற்றுக்கான பெறுமதி சேர்க்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் , மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் 






  .