பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவன் ஜெ. ஹரிவர்ஷன்

 (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஜெ. ஹரிவர்ஷன் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 184 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்  


இவர்  பல்சமய இந்து மத தலைவர் சிவஸ்ரீ  ஜெகதீஸ் வர குருக்கள் , மற்றும் திருமதி கிருபாஹரி ஜெகதீஸ் வர ஆசிரியரின்  புதல்வன் ஆவார்.

பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த மாணவனை பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் ,பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகம் பாராட்டி , வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்