தேசிய கல்விக்கல்லூரியின் புதிய பீடாதிபதியாக கே .புண்ணியமூர்த்தி கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்



(லியோன்)

மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் முன்னால் பீடாதிபதி  எஸ் .இராஜேந்திரன் ஓய்வு பெற்று செல்லும் நிலையில் கல்விக்கல்லூரியின் நான்காவது பீடாதிபதியாக  கடமைகளை பொறுப்பேற்றுள்ள  புதிய பீடாதிபதி கே .புண்ணியமூர்த்தியை வரவேற்கும்  நிகழ்வு மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெற்றது


ஓய்வுபெற்று செல்லும் முன்னால் பீடாதிபதி எஸ் .இராஜேந்தின தமது பீடாதிபதியின் பொறுப்புக்களை கையளித்ததுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார் .

இதனைதொடர்ந்து உபபீடாதிபதிகள் , விரிவுரையாளர்கள் புதிய பீடாதிபதிக்கு ,ஒய்வு பெற்று செல்லும் பீடாதிபதிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்