இடைப்போக நெற்செய்கையின் மூன்றாவது போக அறுவடை விழா

 (லியோன்)

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் பன்சேனை ஓதியங்குடாறு கமநல அமைப்பின் ஏற்பாட்டில் அடைச்சகல் நீர்ப்பாசனக் குளத்தின் கீழ் விசேட இடைப்போக நெற்செய்கையின் மூன்றாவது போக அறுவடை விழா நடைபெற்றது
 

நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக விவசாயிகளினால் அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து அறுவடை நிகழ்வுக்கு அழைத்து வரப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன .

இதனை தொடர்ந்து அறுவடை நிகழ்வு இடம்பெற்றது , இதன்போது முதல் அறுவடையின் மாவட்ட அரசாங்க அதிபர் அறுவடை செய்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்

பன்சேனை ஓதியங்குடாறு கமநல அமைப்பின் தலைவர் ஐ .பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற அறுவடை நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் ,சிறப்பு அதிதிகளாக  கிழக்கு மாகாண  நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ் .திலகராஜ , , மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி பணிப்பாளர் எந்திரி டி சிவலிங்கம் ,மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் , மட்டக்களப்பு விரிவாக்கல் பிரதி விவசாயப் பணிப்பாளர்  வி .பேரின்பராஜா முன்னாள் மாகாணசபை இரா .துறை ரெட்ணம் மற்றும் பன்சேனை ஓதியங்குடாறு கமநல அமைப்பின் உறுப்பினர்கள் , விவசாயிகள் கலந்துகொண்டனர்