மட்டக்களப்பு பிள்ளையாரடி நல்லையா வித்தியாலய முப்பெரும் விழா


(லியோன்)


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு பிள்ளையாரடி நல்லையா வித்தியாலயத்தின் சிறுவர் ,முதியோர் , ஆசிரியர் மற்றும் பரிசளிப்பு விழாவாக முப்பெரும் விழா  அதிபர் வி .பிரபாகரன்  .  தலைமையில்  வித்தியாலய மண்டபத்தில்  நடைபெற்றது 
  

ஆரம்ப நிகழ்வாக  மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் இதனைதொடர்ந்து ,மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது

இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலாசார நிகழ்வுகளும் தொடர்ந்து பரிசளிப்புகளும் இடம்பெற்றன  

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  பாராளுமன்ற உறுப்பினர் ஞா  ஸ்ரீ நேசன் , கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ் எம் .ஹைதரலி , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .அருள்பிரகாசம் , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக  உதவிக்கல்விப் பணிப்பாளர் தமிழ் டி யுவராஜன் .மட்டக்களப்பு மக்கள் தொடர்பாடல் அலுவலக பொலிஸ் உத்தியோகத்தர்  அன்புராஜ் ,மாநகர சபை உறுப்பினர் கே .ரகுநாதன் மற்றும்  மாணவர்கள் பெற்றோர் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் கலந்துகொண்டார்