கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச இளைஞர்கழக மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (23.10.2018) வாழைச்சேனை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
கோறளைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.சபியதாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் திரு .வை.வாசுதேவன் உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிரிந்தன் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்று இக்கூட்டத்தில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கிராமமட்ட அமைப்புக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு அறீவூட்டப்பட்டது.
மேலும் 2019 ம் வருடத்திற்க்காக இளைஞர் கழகங்களை புனரமைப்பு செய்யும் வகையில் வாழைச்சேனை பிரதேச சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.