நூலக ஆளணியினருக்கான நூலக மென்பொருள் பாவனை பயிற்சி கருத்தரங்கு


  .
(லியோன்)

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் இயங்கும் பொது நூலகங்களின் நூலக ஆளணியினருக்கான  “ நூலகங்களிடையே நூலக மென்பொருள் பாவனையை ஏற்படுத்தல் ‘ எனும் தலைப்பின் கீழ்  நூலக தன்னியக்கமாக்கலும் இலத்தினியல் நூலகங்களும் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றாது
   

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தின்  நூலகர் திருமதி  கே .ருத்திரகுமார் தலைமையில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கில் வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக நூலக கணணி மென்பொருள் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ் .ரவிக்குமார் கலந்துகொண்டார் ,

நடைபெற்ற பொது நூலக ஆளணியினருக்கான நூலக மென்பொருள் பாவனை தொடர்பான பயிற்சி கருத்தரங்கில்  மாநகர முதல்வர் தியாகராஜா சரவனபவம்  ,பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் , பிரதி ஆணையாளர் என் ,தனஞ்சயன் , மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்ற பிரதி ஆணையாளர் பிரகாஷ்  ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்