விழிப்புலனற்றோர்களுக்கான கணணி பயிற்சி நிலையம்


(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கல்லடி நொச்சி முனையில் அமைந்துள்ள மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்தில்  விழிப்புலனற்றோர்களுக்கான கணணி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது 
 

விழிப்புலனற்றோர்களின் கணணி தொழில் நுட்ப அறிவினை மேம்படுத்தும் வகையில் பீர் டு பீர் அறக்கட்டளை அமைப்பினால்  உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்திற்கு  கணனிகள் வழங்கப்பட்டு கணணி தொழில்நுட்ப பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது

மட்டக்களப்பு  பிரபல வர்த்தகரான N. ஜெகதிஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ் அருள்மொழி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு  இந்த பயிற்சி நிலையத்தின திறந்து வைத்தனர்

இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சமூக விஞ்ஞான வியல் துறை தலைவர் தில்லைநாதன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் டி .ராஜ்மோகன் , ,உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஆலோசகர்கள்,சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்