(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் அதிபர் . கே ஸ்ரீதரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்களின் ஒழுங்கமைப்பில் அதிபர் . கே ஸ்ரீதரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக மாணவர்களினால் அதிதிகளையும் , ஆசிரியர்களையும்
வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது . அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டு ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும்
வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது .
சமூகத்திற்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளை உருவாக்குவதில் வழிகாட்டியாகஇருக்கின்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு
நடைபெற்றது
இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் , பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .
இந்நிகழ்வுடன் இணைந்ததாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அகில இலங்கை தமிழ் மொழி
தின போட்டியில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறுகதை ஆக்கத்தில்
இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றிபெற்ற மாணவிக்கு பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது