காணாமல் போனதாக தேடப்பட்ட மாணவி சடலமாக மீட்பு

 (லியோன்)

மட்டக்களப்பு கல்லடி ஆற்றுப்பகுதியல்
கரை ஒதுங்கிய நிலையில் பாடசாலை  மாணவி ஒருவரின்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 
.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவக்குடா மாரியம்மன் கோயில் வீதியில் பகுதியில் உள்ள  வீடு  ஒன்றில் தங்கி இருந்த  கல்லடி உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில்  உயர் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவி ( 29 ) காணாமல் போனதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் குறித்த மாணவி  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்  .  

குறித்த மாணவி  மட்டக்களப்பு கரடியனாறு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கரடியனாறு  பகுதியை சேர்ந்த  வசந்தராஜா தேவயாணி , வயது 18  பாடசாலை மாணவியே  இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் . 

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின்  மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ் மற்றும் காத்தான்குடி பொலிசாரினாலும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்