மாகாண முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு


(லியோன்)

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது 


முன்பிள்ளை அபிவிருத்தியின் கிழக்குமாகாணத்தின்  மட்டக்களப்பு ,அம்பாறை , திருகோணமலை  ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றுகின்ற  முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிள்ளைகள் வாழுகின்ற வீடு , சுற்றாடல் , அவர்களின் எதிர்கால உலகை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பாக அமையும் அதனைக் கட்டிஎழுப்புவது வளர்ந்தவர்களாகிய எமது பொறுப்பாகும் என்ற ‘தற்சிந்தனை” தொடர்பான  செயலமர்வு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி .முரளிதரன் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலக  மேலதிக காணி அரசாங்க அதிபர் திருமதி தவருபரஞ்சனி முகுந்தன் தலைமயில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற  தமிழ் மொழி மூல கிழக்குமாகாண  முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான  செயலமர்வில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் ,வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் கடம்பநாதன் மற்றும் மட்டக்களப்பு ,அம்பாறை , திருகோணமலை  ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றுகின்ற  முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்