அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா


   
(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி .பிரதீபா தர்ஷன் தலைமையில் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது 
 

ஆரம்ப நிகழ்வாக சிறார்களினால் அதிதிகள் வரவேற்பு அளிக்கப்பட்டு ,மங்கள விளக்கேற்றப்பட்டு இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது

இந்நிகழ்வில் சிறார்களின் நடன நிகழ்வுகளும் சிறார்களுக்கான பரிசளிப்புகளும் இடம்பெற்றன   

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை பணியக செயலாற்றுப் பணிப்பாளர்  எஸ் .சசிகரன் இவருடன் இணைந்து திருமதி .சசிகரன் ,அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய பங்குதந்தை இரட்ணகுமார் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுவர் மேன்பாட்டு உத்தியோகத்தர் .டி .மேகராஜன் , மாநகர சபை உறுப்பினர் தம்பிராஜா இராஜேந்திரன்  பாலமீன்மடு பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் ,சிறார்களின் பெற்றோர் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் கலந்துகொண்டார்