(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் சாரதி பயிற்சி பாடசாலை
ஆசிரியர்களுக்கான அடிப்படை முதலுதவி பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து திணைக்கள
உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதி பயிற்சி
பாடசாலை ஆசிரியர்களுக்கான சர்வதேச
தரத்திலான அடிப்படை முதலுதவி பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து
திணைக்கள மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது .
நடைபெற்ற பயற்சி பட்டறையில்
உயிரை பாதுகாத்தல் , இலகுவாக குணமடைதல் , விபத்து ,நோய்வாய்ப்படும்
செய்யப்படவேண்டிய முதலுதவிகள் போன்ற விடயங்கள் பயிற்சிகளாக வழங்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து திணைக்கள முகாமையாளர் எ எல் எம் .
பாறுக் தலைமையில் நடைபெற்ற முதலுதவி பயிற்சி பட்டறையில் வளவாளராக இலங்கை
செஞ்சிலுவை சங்கத்தின் சிரேஷ்ட முதலுதவி பயிற்றுப்விப்பாளர் ஆ. சோமசுந்தரன்
மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின்
மட்டக்களப்பு கிளை உத்தியோகத்தர் வி .பிரேம்குமார் , போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் சாரதி பயிற்சி பாடசாலை ஆசிரியர்கள்
கலந்துகொண்டனர்