போக்குவரத்து திணைக்களம் மற்றும் சாரதி பயிற்சி பாடசாலை ஆசிரியர்களுக்கான முதலுதவி பயிற்சி பட்டறை


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்  மற்றும் சாரதி பயிற்சி பாடசாலை ஆசிரியர்களுக்கான அடிப்படை முதலுதவி பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள்  மற்றும் சாரதி பயிற்சி பாடசாலை ஆசிரியர்களுக்கான  சர்வதேச தரத்திலான அடிப்படை முதலுதவி பயிற்சி பட்டறை மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து திணைக்கள மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்றது .

நடைபெற்ற பயற்சி பட்டறையில்  உயிரை பாதுகாத்தல் , இலகுவாக குணமடைதல் , விபத்து ,நோய்வாய்ப்படும் செய்யப்படவேண்டிய முதலுதவிகள் போன்ற விடயங்கள் பயிற்சிகளாக வழங்கப்பட்டது 

மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து திணைக்கள முகாமையாளர் எ எல் எம் . பாறுக் தலைமையில் நடைபெற்ற முதலுதவி பயிற்சி பட்டறையில் வளவாளராக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சிரேஷ்ட முதலுதவி பயிற்றுப்விப்பாளர் ஆ. சோமசுந்தரன் மற்றும்  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளை உத்தியோகத்தர் வி .பிரேம்குமார் ,  போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்  மற்றும் சாரதி பயிற்சி பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்