பாலர் பாடசாலை சிறார்களின் போசாக்கு தொடர்பான செயலமர்வு


(லியோன்)


பாலர் பாடசாலை சிறார்களின் போசாக்கு தொடர்பாக பாடசாலை ஆசியர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


சுகாதரா அமைச்சின் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை சிறார்களின் போசாக்கு தொடர்பாக பாடசாலை ஆசியர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி கீர்த்கா மதனழகன் தலைமையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்தில் நடைபெற்றது ,

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள செயலமர்வில் முதல் நாள் செயலமர்வில் பிரதம அத்தியாக மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை பணியக செயலாற்றுப் பணிப்பாளர்  எஸ் .சசிகரன்  கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்

இந்த செயலமர்வில் வளவாளர்களாக தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய  பாலர் பாடசாலை பணியக வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி காவியா விஜயகுமார் ,பாலர் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் ,மூன்று நாட்கள் நடைபெறவுள்ள செயலமர்வில் 120 பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிபிடத்தக்கது