மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா


(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய    கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வு கல்லூரி அதிபர் ஆர் பாஸ்கரன்   தலைமையில்  கல்லூரி பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது  


நடைபெற்ற வருடாந்த கல்லூரியின் பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளில்  சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவித்து   பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு  தின நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை கிழக்கு பல்கலைக்கழக  முதல்வரும் , மெதடிஸ்த மத்திய    கல்லூரியின் பழைய மாணவனுமான கலாநிதி வள்ளிபுரம் கனகசிங்கம் கலந்துகொண்டார் .

நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாலர் பாடசாலை பணியக செயலாற்றுப் பணிப்பாளர்  எஸ் .சசிகரன்  ,மட்டக்களப்பு  கோட்டக்கல்விப் பணிப்பாளர்  எ .அருள்பிரகாசம் ,கல்லூரி பழைய மாணவர்கள் , மதத்தலைவர்கள் கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , என பலர்  கலந்துகொண்டனர்