ஏறாவூரில் இடம்பெற்ற குட்டீஸ் விளையாட்டு நிகழ்வு…




ஏறாவூரில் இடம்பெற்ற குட்டீஸ் விளையாட்டு நிகழ்வு…

ஏறாவூர் இஹ்லாஸ் முன்பள்ளி பாடசாலை சிறார்களுக்கான வருடாந்த விளையாட்டு நிகழ்வு நேற்று முன் தினம் சவுக்கடி கடற்கரைப் பிரதேசத்தில் அதன் செயலாளர் எஸ்.எம்.நஜீம் தலைமையில் இடம்பெற்றது.

குட்டீஸ்களுக்கான விளையாட்டு எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முன்பள்ளிப் பாடசாலைகளுக்கான பொறுப்பதிகாரி அல்ஹாஜ் எஸ்.ஏ.சி.கலிலூர் ரஹ்மான், திடீர் மரணவிசாரணை அதிகாரியும் சமூக சேவையாளருமான எம்.எஸ்.நசீர், மனித உரிமைகள் விசாரணை அதிகாரி ஐ.எம்.தஸீர் மற்றும் பாடசாலை நிருவாகத்தினர், பெற்றோர்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வித்தியாசமானதும், சிறப்பானதுமான சிறுவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள், களியாட்டங்கள் என்பன இடம்பெற்று. அதிதிகளினால் சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.