இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் திம்புலாகலையில் தெய்வீக கிராம நிகழ்வு.


(சசி துறையூர்) திம்புலாகலை பிரதேச செயலகம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் சொறிவில் தமிழ்க்கலவன் பாடசாலை இணைந்து நடாத்திய  தெய்வீக கிராம நிகழ்வு அண்மையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் சொறிவில் தமிழ்க்கலவன் பாடசாலை முன்றலில் வெகு சிறப்பாக  இடம்பெற்றன.


இந் நிகழ்வில்,
01.தெய்வீக பூசை , நந்திக்கொடியேற்றல், குரு ஆசிர்வாதம், பிடியரிசி சேமித்தல், வஸ்திரதானம், கோமாதா பூசை, அறநெறிப் பாடசாலையின் விழிப்புணர்வு  ஊர்வலம், கலைநிகழ்வு, அன்னதானம் என பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , நிகழ்வில் சமயப்பிரமுகர்கள், அரச உத்தியோகத்தர்கள், மாவட்டதின் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலயத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.