வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள்


(லியோன்)

 மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களை குறைக்கு வகையில் பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன

இதன்கீழ் மட்டக்களப்பு மாநகர சபையினால் பிரதான வெள்ள வாய்க்கால்களை துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .


இதற்கு அமைய மட்டக்களப்பு அமிர்தகழி முதலாம்  வட்டார  உறுப்பினர் தம்பிராஜா இராஜேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாநகர முதல்வரின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி பழையாறு பிரதான வெள்ள வாய்க்காலினை  துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன

இந்த வாய்க்கால் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் மாநகர சபை  ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்