(விளாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்/ மமே/மங்கிகட்டு அ.த.க பாடசாலையில் சர்வதேச ஆசிரியர் தினம் பாடசாலையில் பாடசாலையின் அதிபர் மு.கலைச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வின் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிச்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முறைசாராக் கல்வி மற்றும் மேற்கு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்சிதமலர் கருணாநிதி அவர்கள் வருகை தந்திருந்தார்.
இவ் நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.