இராணுவத்தின் 69 ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு


  .
(லியோன்)


இலங்கை இராணுவத்தின் 69 ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் கல்லடி 231 இராணுவ படை பிரிவின் ஏற்பாட்டில் இராணுவ படை அதிகாரி  பிரிகேடியர்  என் .டி எஸ். பி . நுவுன் எல்ல  தலைமையில் இரத்த தான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி 231 வது இராணுவ படை பிரிவு தலைமையக பிரதான மண்டபத்தில்  நடைபெற்றது


இலங்கை இராணுவத்தின் 69 ஆண்டு நிறைவினை  முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்த தானம் நிகழ்வு நடைபெற்றது

இந்த இரத்ததான நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் , மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து குருதியினை வழங்கியிருந்தனர்

இந்நிகழ்வில் மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார  வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவின் பொறுப்பதிகாரி  வைத்தியர்  பிரபா சங்கர் , களுவாஞ்சிகுடி  வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் திருமதி கிருஷ்ணவேணி  சுஜீந்திரன்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்