(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி
, வவுணதீவு , ஆரையம்பதி , மண்முனை வடக்கு , மண்முனை பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில்
பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தையும் ,சுய தொழிலையும்
ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி
நிலையத்தின் ஊடாக ஊக்குவிப்பு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதன் கீழ் சூரியா பெண்கள்
அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக சுய
தொழில் ஈடுபடும் பெண்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு
மயிலம்பாவெளி உள்ள சூரியா
பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் சுரபி “சுயதொழில்
உற்பத்தியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் ,விற்பனையும் நடைபெற்றது
சுயதொழில் உற்பத்தி பொருட்கள்
கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வில் செங்கலடி , வவுணதீவு
, ஆரையம்பதி , மண்முனை வடக்கு , மண்முனை பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில்
பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் . சூரியா பெண்கள் அபிவிருத்தி
நிலையத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்