ஊடகவியலாளர் நிமலராஜனின் 18 வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு


(லியோன்)


ஊடகவியலாளர்  மயில்வாகனம் நிமலராஜனின்  நினைவு அஞ்சலி  நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது
  ,

ஊடகவியலாளர்  மயில்வாகனம் நிமலராஜனின்  18  வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா .கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக ஊடகவியலாளர்  மயில்வாகனம் நிமலராஜனின்  உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைசுடர் ஏற்றப்பட்டது .இதனை தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்நிகழ்வினை  தொடர்ந்து  அஞ்சலி  நிகழ்வு நிகழ்வில் கலந்துகொண்டவர்களினால் அஞ்சலி உரைகள் இடம்பெற்றது

இந்நிகழ்வில் மாநகர் முதல்வர் தியாகராஜா சரவணபவன் , பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா அறியநேந்திரன் , .மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் நிலாந்தன் ,மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்க தலைவர் எ .செல்வேந்திரன் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் ஒன்றியத்தின் தலைவர் சிவயோகநாதன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் , ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்