கரவெட்டி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பாற்குட பவனி



(லியோன்)


கரவெட்டி
 ஸ்ரீ பத்திரகாளி அம்மன்  ஆலயத்தின்  கும்பாபிசேக தினத்தை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் சங்காபிசேகமும்  இன்று நடைபெற்றது


மட்டக்களப்பு  மாவட்டத்தில் பழைமை வாய்ந்த  கரவெட்டி அருள்மிகு ஸ்ரீ  பத்திரகாளி அம்மன்   ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கும்பாபிசேக தினத்தை முன்னிட்டு மாபெரும் பாற்குட பவனியும் 108  சங்காபிசேகமும்  சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈச்சந்தீவு  கண்ணகி ஆலயத்தில் இருந்து இந்த மாபெரும் பால் குட பவனி  ஆரம்பமானது .இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடங்களை தாங்கியவாறு இந்த பால்குட பவனியில் கலந்துகொண்டனர்.

பால்குட பவனியானது ஆலயத்தினை சென்றடைந்ததும் அடியார்கள் கொண்டுசென்ற பால் மூலமூர்த்தியாகிய அம்மனுக்கு  அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் 108 சங்காபிஷேக விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது.

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாக  அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்