(லியோன்)
மட்டக்களப்பு
கொத்துக்குளம் ஸ்ரீ முத்தும்ரிய்ம்ம்ன் தேவஸ்தான தீர்த்தக்கேணி இளைப்பாறு மண்டபத்திற்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது
தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தினால்
நடைமுறைப்படுத்துகின்ற துருனு சிரம சக்தி 2018 செயல்திட்டத்தின்
கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் மட்டக்களப்பு கொத்துக்குளம் கிராம சேவை
பிரிவில் ஸ்ரீ முத்தும்ரிய்ம்ம்ன் தேவஸ்தான முன்றலில் உள்ள தீர்த்தக்கேணி
பகுதியில் இளைப்பாறு மண்டபம்
நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு நடைபெற்றது
மாவட்ட தேசிய இளைஞர்
சேவைகள் மன்றமும் மட்டக்களப்பு
கொத்துக்குளம் ஸ்ரீ முத்தும்ரிய்ம்ம்ன் தேவஸ்தான நிர்வாகத்தினரும் இணைந்து நடைமுறைப்
படுத்துகின்ற தீர்த்தக்கேணி இளைப்பாறு
மண்டப வேலைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நித்திய சேக்கிழார்
குருக்கள் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் ஆன்மீக
அதிதியாக வணக்கத்திற்குரிய சுவாமி கல்லடி இராம கிருஷ்ண மிசன் தலைவர் பிரபு
பிரேமானந்தா ஜீ மகராஜ் ,பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்
,சிறப்பு அதிதிகளாக மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ நவேஸ் வரன் , வர்த்தக சங்கத்
தலைவர் எம் .செல்வராஜா , தமிழ் சங்க தலைவர் வி .ரஞ்சிதமூர்த்தி ,, மண்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஆர் பிரவீன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் பிரதேச சம்மேளன அமைப்பாளர் என் . துஜோகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு இராஜகோபுரத்திற்கான அத்திவார அடிக்கல்லை நாட்டி வைத்தனர்