ஏகதச தள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா


(லியோன்)


மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்தும்ரிய்ம்ம்ன் தேவஸ்தான ஏகதச (
11  ) தள இராஜகோபுரத்திற்கான  அத்திவார அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது



ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நித்திய சேக்கிழார் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக வணக்கத்திற்குரிய சுவாமி கல்லடி இராம கிருஷ்ண மிசன் தலைவர் பிரபு பிரேமானந்தா ஜீ மகராஜ் ,பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,சிறப்பு அதிதிகளாக மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ நவேஸ் வரன் , வர்த்தக சங்கத் தலைவர் எம் .செல்வராஜா , தமிழ் சங்க தலைவர் வி .ரஞ்சிதமூர்த்தி ஆகியோர்  கலந்துகொண்டு இராஜகோபுரத்திற்கான  அத்திவார அடிக்கல்லை நாட்டி வைத்தனர்  

ஆரம்ப நிகழ்வாக ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ந்து ஆலய நுழை வாயிலில் நிர்மாணிக்கப்படவுள்ள மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்தும்ரிய்ம்ம்ன் தேவஸ்தான ஏகதச 11  தள இராஜகோபுர அத்திவாரத்திற்கான  அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது

இதனை தொடர்ந்து விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது இந்நிகழ்வில் ஆலய குருக்கள் , ஆலய நிர்வாக சபையினர் , மாநகர சபை உறுப்பினர்கள் , பக்த அடியார்கள் என பலர் கலந்துகொண்டனர்