இந்திய உயர் ஸ்தானிகர் தரன் ஜித் சிங் சந்துவுக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு



(லியோன்)


கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகர்  தரன் ஜித் சிங் சந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை  மேற்கொண்டுள்ளார்



மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள  இந்திய உயர் ஸ்தானிகர்   இந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளார் .

 மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகர்  தரன் ஜித் சிங் சந்துவை வரவேற்கும் நிகழ்வு  மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில்  நடைபெற்றது .

 இந்நிகழ்வின் போது இந்திய உயர் ஸ்தானிகரினால் காந்தி பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம்  செலுத்தப்பட்டது . இதனை தொடர்ந்து இந்திய உயர் ஸ்தானிகரின் வருகையை  கௌரவிக்கும் வகையில் மாவட்ட  மேலதிக  அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரினால் நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் 

 மாவட்ட  மேலதிக  அரசாங்க அதிபர் திருமதி ,சுதர்ஷினி ஸ்ரீகாந தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன்  மாநகர ஆணையாளர் என் ,மணிவண்ணன்  பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் மற்றும்  மாவட்ட செயலக  உத்தியோகத்தர்கள் , ,மாநகர சபை உறுப்பினர்கள் ,கலந்துகொண்டனர்