(லியோன்)
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மை வாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் 210 வது வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
ஆலய பங்குத்தந்தை ரெட்னகுமார் ,தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து
விசேட திருப்பலி அருட்பணி எ தேவதாசன்
அடிகளாரினால் ஒப்புகொடுக்கப்பட்டது .
திருவிழா நவ
நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருச்செபமாலையும் ,திருப்பலியும் இடம்பெறும்.
எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு அன்னையின்
திருவுருவ பவனியும் தொடர்ந்து விசேட திருப்பலி 23ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா
ஜோசெப் ஆண்டகை தலைமையில் விசேட
திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்
.