வீதி பாதுகாப்பு கடமைக்கு பொலிஸ் உத்தியோகத்தரை நியக்குமாறு மக்கள் கோரிக்கை



(லியோன்)


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாள் அமைந்துள்ள பிரதான ஆரம்ப பிரிவு பாடசாலையான மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அரசினர் ஆசிரியர் கலாசாலை என இரு பாடசாலைகள் அமைத்துள்ளது


இந்த  பாடசாலைகளுக்கு  முன்னால் உள்ள பிரதான வீதி ஊடாக அதிகமான  பல கனரக வாகனங்கள் செல்லும் வீதியாக பயன்படுத்துகின்றது .இந்த   நிலையில் பாடசாலை நேரங்களில் இந்த வீதியினை கடந்து பாடசாலைக்கு செல்வதற்கு , பாடசாலையில் இருந்து மீண்டும் வீதியினை கடப்பதற்கு மாணவர்களும் ,மாணவர்களின் பெற்றோர்களும் பெரும்   அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதான ஆரம்ப பிரிவு பாடசாலையான கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவ சிறார்களின் 
பாதுகாப்பினை கருத்தில் கொண்டு  பாடசாலை நேரங்களில்  குறித்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பிரதான வீதிக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடமையில் ஈடுபடுத்துமாறு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை  விடுக்கின்றனர் .

எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இதனை கவணத்தில் கொண்டு  மாணவர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்