சுதந்திரமானதும்
நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஏற்பாட்டில் இயல்திறனைக்
கட்டியெழுப்பும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கான
செயலமர்வு மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக கேட்போர்
கூடத்தில்நடைபெற்றது.
மக்கள் பிரதிநிதிகள் சமூக
மட்டத்தில் எவ்வாறான வினைத்திறனான இயல்திறனைக் கட்டியெழுப்ப வேண்டும் அதில்
முக்கியமாக பெண் மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சியுடனான
செயலமர்வாக நடைபெற்றது
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்
தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான
மக்கள் இயக்கத்தின் தேசிய இணைப்பாளர்
ஜனாப் மனாஸ் , சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின்
மாவட்ட இணைப்பாளர் காண்டீபன் , சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்
இயக்கத்தின் மாவட்ட உதவி இணைப்பாளர் எ மீராசாகிப் ,மாவட்ட ,உதவி இணைப்பாளர் ஜே எப் . காமிலா மற்றும் மட்டக்களப்பு
மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் , தவிசாளர்கள் கலந்துகொண்டனர்