(லியோன்)
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய்
பாரதி வித்தியாலய மாணவ தலைவர்கள் மற்றும்
சுகாதார கழக மாணவர்களுக்கான சின்னம்
சூட்டும் நிகழ்வு இன்று பாடசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய வகுப்பு தலைவர்கள் , மாணவ தலைவர்கள்
மற்றும் ,சுகாதார கழக மாணவர்களுக்கும்
சின்னம் சூட்டும் நிகழ்வு வித்தியாலய அதிபர் கே .முரளிதரன் தலைமையில் பாடசாலை முன்றலில் நடைபெற்றது .
பாடசாலை உடற்கல்வி , .சுகாதார
கழக ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் வித்தியாலய ஆசிரியர்கள் , மாணவர்களின்
பங்களிப்புடன் நடைபெற்ற சின்னம் சூட்டும் நிகழ்வு
மாணவர்களின் இறை வணக்கத்துடன்
ஆரம்பமானது
இதனை தொடர்ந்து அதிபரின் சிறப்புரைகளுடன் மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது . இதனை தொடர்ந்து அதிதிகள் ,ஆசிர்யர்களினால் மாணவர்களுக்கு
சின்னம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்
(தமிழ்) பணிப்பாளர் எ ஜே .பிரபாகரன் ,
கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி .எஸ் பிரசாந்தி , பாடசாலை அபிவிருத்தி சங்க
செயலாளர் திருமதி எஸ் .விஜிதா ,மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்