மட்டு- மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய   மாணவ தலைவர்கள் மற்றும் சுகாதார கழக மாணவர்களுக்கான  சின்னம் சூட்டும் நிகழ்வு  இன்று  பாடசாலையில் நடைபெற்றது.



மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய வகுப்பு தலைவர்கள் , மாணவ தலைவர்கள் மற்றும்  ,சுகாதார கழக மாணவர்களுக்கும் சின்னம் சூட்டும் நிகழ்வு வித்தியாலய அதிபர் கே .முரளிதரன்  தலைமையில் பாடசாலை முன்றலில்  நடைபெற்றது .

பாடசாலை  உடற்கல்வி , .சுகாதார கழக ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் வித்தியாலய ஆசிரியர்கள் , மாணவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற சின்னம் சூட்டும் நிகழ்வு  மாணவர்களின் இறை  வணக்கத்துடன் ஆரம்பமானது 

இதனை தொடர்ந்து  அதிபரின்  சிறப்புரைகளுடன்  மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு  இடம்பெற்றது . இதனை தொடர்ந்து  அதிதிகள் ,ஆசிர்யர்களினால் மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப் (தமிழ்) பணிப்பாளர்  எ ஜே .பிரபாகரன் , கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி .எஸ் பிரசாந்தி , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி எஸ் .விஜிதா ,மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்  என பலர் கலந்துகொண்டனர்