(லியோன்)
மட்டக்களப்பு தாண்டவன்வெளி திரு அவை தனியான பணித்தளமாக பிரகடனப் படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியினை சிறப்பிக்கும் விசேட திருப்பலியும் , நிகழ்வுகளும் இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு தாண்டவன்வெளி திரு அவை தனியான பணித்தளமாக பிரகடனப் படுத்தப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியினை சிறப்பிக்கும் விசேட திருப்பலியும் , நிகழ்வுகளும் இன்று நடைபெற்றது
மட்டக்களப்பு மறை
மாவட்டத்தில் 1624
ஆம் ஆண்டு கட்டப்பட்ட தாண்டவன்வெளி
தூய காணிக்கை அன்னை திரு அவை புளியந்தீவு இணைப்பேரலய பணித்தளத்தோடு
இணைந்திருந்த வேளையில் 1918
ஆம் ஆண்டு
செப்டெம்பர் ஒன்பதாம் திகதி தாண்டவன்வெளி திரு அவை தனியான பணித்தளமாக
பிரகடனப் படுத்தப்பட்டு அருள்பனியாளர் ஒருவரின்
நிர்வாகத்தில் செயல்பட்டு வந்த தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் 100 வது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றது
100 ஆண்டுகள் பூர்த்தியினை சிறப்பிக்கும் விசேட
திருப்பலியும் விசேட நிகழ்வுகளும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா
ஆண்டகை தலைமையில் நடைபெற்றது
மறை மாவட்ட ஆயர்
ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் பங்கு தந்தை அருட்பணி ரமேஷ் கிறிஸ்டி , அருட்பணி
எலக்ஸ் ரொபட் அடிகளார் இணைந்து
ஒப்புகொடுக்கப்பட்ட திருப்பலியை தொடர்ந்து நூறாவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில்
காணிக்கை அன்னை ஆலயத்தின் வரலாற்றை நினைவு கூறும் நூற்றாண்டு சிறப்பு மலர்
வெளியீட்டு வைக்கப்பட்டது
இந்நிகழ்வுகளில்
பங்கு மக்கள் , அருட்சகோதரிகள் ,அருட்சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர்