புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…







புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் வேண்டுகொளுக்கிணங்க ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் புளியந்தீவு தெற்கு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சிறுவர்களுக்கு முதற்கட்டமாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கழகத்தின் பொருளாளர் எஸ்.மிதுன்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ரிதம் இளைஞர் கழகத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகரும், மாநகரசபை உறுப்பினருமான அந்தோனி கிருரஜன், மண்முனை வடக்குப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி, ஜேர்மன் உதயம் அமைப்பின் பணிப்பாளர் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வருகை தந்திருந்த முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்ட சிறுவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது. அடுத்த அடுத்த கட்டங்களில் எமது பிரதேசத்தில் இருக்கும் ஏனைய சிறுவர்களுக்கும் இவ்வாறான உதவிகள் மேற்கொள்ளவுள்ளதாக மாநகரசபை உறுப்பினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.