அமிர்தகழி மாணிக்கப் பிள்ளையார் ஆலய குறுக்கு வீதி செப்பனிடும் பணிகள் ஆரம்பம்


  (லியோன்)

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் சிந்தனைக்கு அமைவாக  மட்டக்களப்பு மாநகர சபையினால்  நகர அபிவிருத்திக்காக நிதிகள் ஒதுக்கீடுகள்  செய்யப்பட்டு  மாநகரை  முதன்மை படுத்தும் நடவடிக்கைகள் கீழ்  மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் உள்ள வீதிகள் புனரமைப்பட்டு வருகின்றன


இதற்கு அமைய மட்டக்களப்பு அமிர்தகழி முதலாம்  வட்டார  உறுப்பினரும் , மாநகர சபையின் வேலைகள் மற்றும் அனர்த்த குழு  உறுப்பினருமான  தம்பிராஜா இராஜேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாநகர முதல்வரின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி மாணிக்கப் பிள்ளையார்  ஆலய குறுக்கு  வீதி செப்பனிடும்  பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

இந்த செப்பனிடும் ஆரம்ப பணிகளை  மாநகர முதல் தியாகராஜா சரவணபவன் ,பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் மற்றும் மாநகர உறுப்பினர்களான டி .மதன் ,பூபாலராஜா , ரூபன் ஆகியோர்  நேரில் சென்று பார்வையிட்டனர்