வீதி போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

 (லியோன்)


மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயம் மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலையத்திற்கு முன்னாள் அமைந்துள்ளது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  குறித்த பாடசாலை பிரதான ஆரம்ப பிரிவு பாடசாலையாக செயல்பட்டு  வருகின்றது



குறித்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பிரதான வீதி ஊடாக அதிகமான கனரக வாகனங்கள்  பயணிக்கின்றன . .இந்நிலையில்  பாடசாலை நேரங்களில் இவ்  வீதியினை கடந்து பாடசாலைக்கு செல்வதற்கு , பாடசாலையில் இருந்து மீண்டும் வீதியினை கடப்பதற்கு மாணவர்களும் ,மாணவர்களின் பெற்றோர்களும் பெரும்  அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பொதுமக்கள் சுற்றிக்காட்டி இருந்தனர் .

மாணவ சிறார்களின்  பாதுகாப்பினை கருத்தில் கொண்டு  பாடசாலை நேரங்களில்  குறித்த பாடசாலைக்கு முன்னால் உள்ள பிரதான வீதிக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடமையில் ஈடுபடுத்துமாறு பொதுமக்களும் ,மாணவர்களின் பெற்றோர்களும்  கோரிக்கை  ஒன்றை  விடுத்திருந்தனர்

இதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து  உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இதற்கு அமைய மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி எஸ் .ராஜபக்ஸ  இன்று வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தார் .,இச்செயல்பாட்டுக்கு  பொதுமக்களும் ,மாணவர்களின் பெற்றோர்களும்  நன்றி தெரிவிக்கின்றனர்