விளாவட்டவான் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய உற்சவ பாற்குடபவனி




மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழான் பாற்குடபவனி இன்று (11.08.2018) இடம்பெற்றது.

விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி ஆரம்பமாகி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தை வந்தடைந்ததும் உற்சவகால குரு சிவஸ்ரீ .ச.கோபாலப்பிள்ளை அவர்களினால் பாலாபிசேகம் இடம்பெற்றது.

உற்றவத்தின் இன்றைய இரவினை சிறப்பிக்கும் வண்ணம்  கன்னன்குடா கண்ணகி முத்தமில் மன்றத்தின் "வாளவீமன் " தென்மோடி கூத்து இடம்பெறும்.