சனசமூக நிலையங்களை தாபிப்பதற்கான அறிவுரை தொகுப்பு நூல் வெளியீடு


 
(லியோன்)

மக்கள் பங்கேற்புடன் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் இணைந்து உள்ளூராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்களில் சனசமூக நிலையங்களை தாபிப்பதற்கான அறிவுரை தொகுப்பு நூல் வெளியீடு மட்டக்களப்பில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு மாவட்ட ஜனதாக்சன நிறுவனம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பங்கேற்புடன் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளுடன்  இணைந்து  பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது

மட்டக்களப்பு மாவட்ட ஜனதாக்சன நிறுவன நிதி உதவியின் கீழ் மாவட்டத்தின் போரதீவு பற்று பிரதேச செயலகம் மண்முனை தென்மேற்கு  பிரதேச செயலகங்கள் மற்றும்  உள்ளூராட்சி மன்ற சபைகளுடன்  இணைந்து  உள்ளூராட்சி மன்ற அதிகாரப் பிரதேசங்களில் சனசமூக நிலையங்களை தாபிப்பதற்கான அறிவுரை தொகுப்பு நூல் வெளியீடும் ,இதன் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுக்கு  தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மண்டபத்தில் நடைபெற்றது

ஜனதாக்சன நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் எஸ். பாஸ்கரன் ஒழுங்கமைப்பில்  கிழக்குமாகான உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எம் வை . சலீம்  தலைமையில் நடைபெற்ற அறிவுரை தொகுப்பு நூல் வெளியீடு நிகழ்வில் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள ஆலோசகர்  இந்திய அரசின் பஞ்சாய ராஜ் வைத்தியர் .பாலன் ,களனி பல்கலைக்கழக புவியியல் அபிவிருத்தி கற்கை பிரிவு வைத்தியர் நிசான் சகலசூரிய , மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் கே .சித்திரவேல் , மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன்  மற்றும் உள்ளூராட்சி மன்ற  தலைவர்கள் ,மன்ற செயலாளர்கள் , ,ஜனதாக்சன நிறுவன திட்டமிடல் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்