சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் சட்டவிரோத மாடுகள் கடத்தல் சட்டவிரோத மது விற்பனைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்தி குழு பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தது.

மட்டக்களப்பு தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று பிரதேசஅபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி மற்றும் எஸ்.வியாளேந்திரன் மற்றும் சோ.கணேசமூர்த்தி(ஐ.தே.க அமைப்பாளர்) தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமண்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் பிரதேசசெயலாளர் தட்சணாமூர்த்தி பிரதேசசபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் கலந்கொண்டிருந்தனர்.

இக் கூட்டத்தில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் குறித்து ஆராயப்பட்டதுடன் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பிரதேசத்தில் காணப்படும் பொது மக்களின் பொதுவான பிரச்சினைகள் வாழ்வாதாரம் தொழ்லாவாய்ப்பு பற்றியும் ஆராயப்பட்டது அத்துடன் குடிநீர் சுகாதாரம் மீன்பிடி விசசாயம் ஏனைய கைத்தொழில் துறைகளில் திர்நோக்கப்படும்  பிரச்சிணைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்காடுப்படுதொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன் போது மிக முக்கியமாக குறித்த பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மாடு கடத்தல் சட்டவிரோத மதுவிற்பனை நடவடிக்கைகள் சட்டவிரோத மண்கடத்தல்கள் ஏனைய சட்டவிரோதசெயற்பாடுகள் காரணமாக குறித்த பகதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிர்சணைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பிரதேசஅபிவிருத்தி குழுவின் கவணத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றதுடன் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கான விசேடநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பட்டிப்பளை பொலிசாருக்கு அபிருவித்து இணைத்தலைமைகளினால் பணிப்புரை வழங்  கப்பட்டது.

அத்துடன் ஞாயிறு மற்றும் போயாதினங்களிர் அறநெறிக்கல்விக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் குறித்த தினங்களில் இப்பிரதேசத்தில் தனியார் வகுப்புகளை தடுக்கும் வகையில் 12.00மணி வரையில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பிரதேச அபிவிருத்திக்குழு மூலம் வழங்கப்பட்டது.