புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்- மாவட்டத்தினை நேசிப்பவர்களுக்கு அழைப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, புல்லுமலை பிரதேசத்தில் தண்ணீர் தொழிற்சாலை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

பொது மக்களின் ஆர்ப்பாட்டம் மற்றும்; பலரது  எதிர்ப்புகளையும் மீறி  குறித்த  தொழிற்சாலை அமைக்கும் பணி  தொடர்வதால் இம்முறை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் நோக்குடன் 'ஜனாதிபதிக்கு சொல்வோம் ' என்ற அடிப்படையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இப் பிரதேசத்தில் கிணறுகளில் குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழ்நிலையில், இங்கு இத்தொழிற்சாலை அமைப்பதன் மூலம் அவ்பிரதேசத்தில் உள்ள நிலத்தடி நீர் உறிஞ்ச படுவதனால் எதிர்காலத்தில் அப்பிரதேசம் பாலைவனமாகும் நிலை ஏற்ப்படும் என்ற ஐயத்தில் பொதுமக்கள் காணப்படுகின்றது.

பல்வேறு வழிகளிலும் பொதுமக்கள் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு சுதந்திர கட்சியின் காத்தான்குடி நகரசபை தவிசாளர் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.



இவ் தொழிற்சாலைக்கு எதிராக அப்பிரேதச பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்(அமல்)அவர்களும் பல வழிகளிலும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர
து இவ்வாறு இருக்க இத்தொழில்சாலை அமைப்பதற்கு காத்தான்குடி மற்றும் செங்கலடி  சுதந்திர கட்சி உறுப்பினர்கள்  ஆதரவு வழங்குவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தொழிற்சாலையை  நிறுத்துவதற்க்கும் இதன் விளைவுகளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் நோக்குடன்

  எதிர்வரும் 09.08.2018 வியாழக்கிழமை   காலை 10 மணிக்கு புல்லுமலை தண்ணீர் தொழில்சாலைக்கு  முன்பாக  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது என பிரதேச பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.